திருச்சி மாநகராட்சி, பீமநகர் தேவர் புது தெருவில் ஏராளமான குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இப்பகுதியில் விளையாடும்போது இந்த வழியாக செல்லும் வாகனங்கள் வேகமாக செல்வதினால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.