சாய்ந்து கிடக்கும் தகவல்பலகை

Update: 2022-09-13 13:21 GMT

சாய்ந்து கிடக்கும் தகவல்பலகை

உடுமலை நகராட்சி பகுதியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன.இந்த வார்டு பகுதிகளில் உள்ள சாலைகளின் நுழைவு பகுதியில், அந்த சாலையின் பெயர் எழுதப்பட்ட தகவல் பலகை நகராட்சி நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. வெளியூர் மற்றும் வேறு பகுதிகளில் இருந்து வருகிறவர்கள் தாங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு செல்வதற்கு இத்தகைய தகவல் பலகைகள் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் சில இடங்களில் இதுபோன்ற தகவல் பலகைகள் கீழே சாய்ந்து கிடக்கிறது. உடுமலை தளிசாலை, பிரதான சாலையாகும். இந்த சாலையின் இடதுபுறம் நெடுஞ்செழியன் காலனி உள்ளது. இதைகுறிக்கும் வகையிலான தகவல் பலகை கீழே சாய்ந்து கிடக்கிறது. அந்த தகவல்பலகையை எடுத்து நேராக நிறுத்தி வைப்பதற்கான நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்

ஸ்டீபன்,உடுமலை

9443172135

மேலும் செய்திகள்