சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம பகுதிகளில் சில இடங்களில் உள்ள சாலை பெயர்ந்து மேடு, பள்ளமாக காட்சியளிக்கிறது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் மழை காலங்களில் சாலையில் பயணிப்பது மிகுந்த சிரமமாகவே உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.