நாகை மாவட்டம் திருமருகலில் இருந்து ஆதினங்குடி, பண்டாரவாடை வழியாக கணபதிபுரம் வரை செல்லும் சாலை பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குண்டும்,குழியுமான சாலையினால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?