சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2022-09-13 10:43 GMT

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பகுதி வெள்ளப்பள்ளம் கடைத்தெருவில் இருந்து மீனவர் காலனி வரை உள்ள சாலை பராமரிப்பின்றி உள்ளது. இதனால் சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்