ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள மேலாங்குடி கிராமத்தில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் சிறு, சிறு விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் வாகனஓட்டிகள் சிலர் விபத்து அபாயம் உள்ளதால் சாலையில் பயணிப்பதை தவிர்த்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.