குறுகலான சாலையில் முளைத்துள்ள முட்செடிகள்

Update: 2022-09-12 13:10 GMT
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்திலிருந்து மேற்பனைக்காடு செல்லும் குறுகலான சாலையில் அரசு டவுன் பஸ்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஏராளம் செல்வதோடு பொதுமக்களும் இருசக்கர வாகனங்களிலும் அதிகமாக சென்று வருகின்றனர். இந்த சாலையில் ஆலடிக்கொல்லையிலிருந்து மேற்பனைக்காடு வரை குறுகலான சாலை ஓரங்களில் அதிகமான முட்செடிகள் வளர்ந்து சாலையை மறைக்கிறது. இதனால் பஸ், லாரி போன்ற வாகனங்கள் செல்லும் போது மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் ஒதுங்க முடியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. ஆகவே சாலையோரம் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்