தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை வழியாக குந்தவை நாச்சியார் கல்லூரி செல்லும் சாலை, கண்ணன் நகர் பிரிவு சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் கல்லூரி செல்லும் மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.இந்த சாலை வழியாக மணிமண்டபம், கலெக்டர் முகாம் அலுவலகம் இருப்பதால் முக்கிய பிரமுகர்கள் அடிக்கடி இந்த சாலை வழியாகத்தான் செல்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க முன் வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சாவூர்.