சேலம் மாவட்டம் பெருமாம்பட்டி கோவில்காடு தெருவில் சாலை சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கருணாநிதி, பெருமாம்பட்டி, சேலம்.