ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பேரையூர் ஊராட்சி அருகே அய்யனார்புரம் கிராமத்தில் சாலை வசதி கிடையாது. இதனால் மழை பெய்தால் சாலையில் நீரானது தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும் இந்த சாலையில் வாகனங்களை இயக்க வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும்.