கரூர் மாவட்டம், நொய்யல்-வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையிலிருந்து கோம்புப்பாளையம் செல்லும் பிரிவு சாலையில் இருந்து செல்லும் தார் சாலை போடப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதன் காரணமாக தார் சாலை நெடுகிலும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வாகனத்தை ஒட்டி செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.