கரூர் மாநகரின் பல சாலைகளில் கால்நடைகள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக நடந்து செல்கின்றன. மேலும் சாலையிலேயே படுத்துக்கொண்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றன. இதனால் இரவு நேரத்தில் மாடுகள் சாலையில் படுத்து இருப்பது தெரியாமல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கால்நடைகள் மீது வாகனத்தை விட்டு விபத்தில் சிக்கி காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.