திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், ஒக்கரை ஊராட்சியில் உள்ள இந்திரா நகர் குடியிருப்புகளுக்குள் செல்லும் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. தற்போது மழை காலம் என்பதால் சாலைகள் சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.