குண்டும், குழியுமான சாலை

Update: 2022-09-08 11:18 GMT
புதுக்கோட்டை மாவட்டம், மேட்டுப்பட்டி-மறுப்பினி சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தொடர் மழையின் காரணமாக தண்ணீரை வெளியேற்றுவதற்கு கடந்த ஆண்டு சாலை உடைக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை சாலையை சரிசெய்யவில்லை. இதனால் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்