ஓசூர் மாநகராட்சியின் நெடுஞ்சாலைக்கு சொந்தமான பிரதான சாலைகள் சமீபத்தில் பெய்த மழையால் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேந்திரன், ஓசூர்.