மதுரை மாவட்டம் வி.கரிசல்குளம் ஐ.ஓ.சி. நகர் பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலை மூடப்படாமல் மண் சாலையாக உள்ளது. தற்போது மழை காலம் என்பதால் சாலை சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. மேலும் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.