சேதமடைந்த சாலை

Update: 2022-09-07 12:42 GMT

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் சோபனபுரத்தில் இருந்து, பச்சைமலைக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் தொடர் மழை காரணமாக சாலையில் ஆங்காங்கே பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி பஞ்சராகி நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதுகுறித்து நடவடிக்ைக எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்