மாணவ-மாணவிகள் அவதி

Update: 2022-09-07 12:12 GMT
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வெண்ணவால்குடி ஊராட்சி வள்ளிக்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் முன்பு உள்ள சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் சேற்றில் இறங்கி நடந்து செல்கிறது. இதனால் சில நேரங்களில் வழுக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், வள்ளிக்காடு.

மேலும் செய்திகள்