திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், ஒக்கரை ஊராட்சியிலுள்ள இந்திரா நகர் குடியிருப்புகளுக்குள் செல்லும் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த நிலையில் மழை பெய்யும்போது மழைநீர் தேங்கி, வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.