சாலை வசதி வேண்டும்

Update: 2022-09-06 11:32 GMT

மயிலாடுதுறை மாவட்டம் ஆறுபாதியில் உள்ள கே.கே. தியா நகரில் சாலை வசதி இல்லை. இதன்காரணமாக பொதுமக்கள் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் மண் பாதையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும், வாகனங்கள் சேற்றில் சிக்கிக்கொள்வதால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி தேங்கி கிடக்கும் நீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்