சிவகங்கை மாவட்ட நகர் பகுதியில் மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் ரெயில்வே பாலத்தில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் வாகனஓட்டிகள் இதனை கடந்து செல்ல சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் இந்த பாலத்தின் அடியில் மழைநீர தேங்காமல் தடுக்க வேண்டும்.