சாலை அமைக்க வேண்டும்

Update: 2022-09-04 17:56 GMT

தேனியை அடுத்த ஆண்டிப்பட்டி ஸ்ரீனிவாசா நகரில் தார்சாலை அமைக்கும் பணிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மண் பரப்பப்பட்டது. ஆனால் அதன் பிறகு அந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக அந்த சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே சாலை பணியை விரைவில் தொடங்க வேண்டும்.


மேலும் செய்திகள்