வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-09-04 15:36 GMT
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட கண்டியன்தெரு சாலை மிக மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த சாலையின் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நடந்து செல்லவே சிரமபடும் நிலை உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே கண்டியன்தெரு சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்