சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சுற்றுலா தலமான பிரான்மலை உள்ளது. இங்்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்து செல்கின்றனர். ஆனால் இந்த சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?