வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-09-04 12:40 GMT

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் சிதிலமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுவதினால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதினால் வாகன ஓட்டிகள் சாலையில் எவ்வளவு பெரிய பள்ளம் உள்ளது என்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்