வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2022-09-04 11:56 GMT

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டிக்கு தெற்கே உள்ளது முனியங்குறிச்சி கிராமத்தில் செயல்படும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 70 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு முன்புறம் தற்போது புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடம் முன்பாக விபத்துக்கள் நிகழாமல் இருக்க மாணவர்களின் நலன் கருதி எவ்வித வேகத்தடையும் அமைக்கவில்லை. அதேபோல் வடக்கு பகுதியில் அரசு அங்கன்வாடி பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. இவ்வழியே செல்லும் கனரக வாகனங்களால் பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்