கரூர் மாவட்டம், மண்மங்கலம், கஸ்தூரி நகரில் மோட்டார் வாகன ஆய்வாளர் கிளை அலுவலகம் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் இந்த சாலை மண் சாலையாக இருப்பதால் மழைகாலங்களில் இந்த சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.