மழைநீர் வடிகால் வேண்டும்

Update: 2022-09-03 12:45 GMT

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை- பூம்புகார் சாலையோரத்தில் மழைநீர் வடிகால் இல்லை. இதன்காரணமாக மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைகின்றனர். மேலும், இருசக்கர வாகனங்களுக்குள் தண்ணீர் புகுந்து வாகனங்களும் அடிக்கடி பழுதாகிவிடுகின்றன. இதன்காரணமாக வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்