மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பேரூராட்சி பஸ் நிலையம் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் சாலையில் வேகத்தடை இல்லை. இதன்காரணமாக அந்த வழியாக வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதன்காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள், சிகிச்சைக்காக வருபவர்கள் அச்சத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர். மேலும், வேகத்தடை இல்லாத காரணத்தினால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?