சேறும்,சகதியுமான சாலை

Update: 2022-09-03 12:28 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதி அசிக்காடு முதல் தேரழுந்தூர் வரை உள்ள சாலை பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், வாகனங்களும் அடிக்கடி சேற்றில் சிக்கிக்கொள்வதால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குண்டும்,குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்