எல்லை பிரச்சினை தீர்க்கப்படுமா?

Update: 2022-09-03 12:03 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள வேம்பங்குடி கிழக்கு பகுதியில் மாவட்ட எல்லை முடிந்து தஞ்சாவூர் மாவட்ட எல்லை தொடங்குகிறது. இரு மாவட்ட எல்லை போர்டுகளும் சுமார் 20 மீட்டர் இடைவெளியில் வைக்கப்பட்டுள்ளது. அந்த போர்டுகள் வைக்கப்பட்டுள்ளதுடன் சாலை மராமத்துப் பணியை முடித்து விடுவதால் இரு போர்டுகளுக்கும் இடையில் உள்ள 20 மீட்டர் சாலையை யார் பராமரிப்பது என்ற எல்லைப் பிரச்சினையால் சாலை உடைந்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இந்த வழியாக அரசு பஸ், பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் ஏராளமான வாகனங்கள், மாணவர்கள் சைக்கிளில் செல்லவும் அச்சப்படுகின்றனர். ஆகவே எல்லை பிரச்சினையை தீர்த்து சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்