சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-03 11:36 GMT

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வீச்சூர் கிராமத்தில் உள்ள கிடாமங்கலம் பாலம் முதல் குரும்பூர், வீச்சூர்,மருதாவூர்,சித்தாம்பூர் சாலை வழியே நன்னிலம் பகுதியை இணைக்கும் சாலை உள்ளது. இந்த சாலை முறையான பராமரிப்பின்றி ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடு,முரடாக கிடக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குண்டும்,குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்