குண்டும், குழியுமான சாலை

Update: 2022-09-02 14:34 GMT
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், ஆலங்குளத்தில் இருந்து மதயானைப்பட்டி வரை சுமார் 4 கிலோ மீட்டர் அளவிற்கு உள்ள தார் சாலையானது ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியே திருச்சியில் இருந்து இலுப்பூருக்கு சென்று வரும் அரசு பஸ் சரியாக வருவதில்லை. இதனால் திருச்சிக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிள்களில் செல்வோரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்