மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த ஆனைமேலகரம் பகுதியில் உள்ள சாலை குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குண்டும்,குழியுமான சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?