சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-02 13:28 GMT

திருவாரூர் மாவட்டம் ஆளத்தான்குடியில் இருந்து பூதமங்கலம்-பொதக்குடியை இணைக்கும் சாலைக்கும் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குண்டும்,குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்