விபத்தில் சிக்கும் வாகனங்கள்

Update: 2022-09-02 12:05 GMT

சுல்தான்பேட்டை அருகே செஞ்சேரிமலையில் இருந்து ஜல்லிபட்டிக்கு செல்ல திரும்பும் வளைவில் சாலையில் பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதை அறியாமல் இரவில் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். மேலும் பாதசாரிகளும் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. இது தவிர அந்த வழியாக செல்லும் வாகனங்களும் பள்ளத்தில் ஏறி இறங்கும்போது பழுதாகி விடுகின்றன. எனவே அந்த பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். 

மேலும் செய்திகள்