மழைநீருடன் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-09-02 11:59 GMT

பொள்ளாச்சி பல்லடம் ரோட்டில் சூடாமணி கூட்டுறவு சங்கத்திற்கு எதிரே மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் மழை பெய்யும்போது கழிவுநீரும் சேர்ந்து தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. அந்த பகுதி சேறும், சகதியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே சாலையோரத்தில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பை சீரமைத்த பிறகு சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. அதையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்