சேறும்,சகதியுமான சாலை

Update: 2022-09-01 12:31 GMT

நாகை மாவட்டம் திருமருகலை அடுத்த போலகம் பகுதி பிள்ளையார்கோவில் அருகே நடுத்தெருவில் சாலை வசதி இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மண்பாதை மழைக்காலங்களில் சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மண்பாதையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த வழியாக செல்லும் வாகனங்களும் சேற்றுக்குள் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்