சாலை பள்ளத்தால் விபத்துகள்

Update: 2022-09-01 12:00 GMT

சாலை பள்ளத்தால் விபத்துகள்

திருப்பூர் - தாராபுரம் நான்கு வழிச்சாலையில் உள்ள இடையன்கிணறில் ராயல் கார்டன் அருகே தார்ச்சாலையில் மிகவும் ஆபத்தான பள்ளம் உள்ளது. சாலையில் இடதுபுறமாகச்செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இரவு நேரங்களில் பள்ளம் இருப்பதே தெரிவதில்லை. பகல் நேரத்தில் பள்ளத்தின் அருகில் வந்த பிறகுதான் குழி இருப்பது தெரிகிறது. பள்ளத்தை பார்த்ததும் உடனடியாக பிரேக் பிடித்தாலும் நிலை தடுமாறி இருசக்கர வாகனங்களில் வருவோர் கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. ஆகவே உயிர்பலி ஏற்படுத்த கூடிய இந்த குழியை நிரப்பி சாலையைச்செப்பனிட்டு சீர் செய்து வாகன ஓட்டிகளின் உயிர்களை பாதுகாக்கவேண்டும்

சாகுல்அமீது,தாராபுரம்

9788566614

மேலும் செய்திகள்