குட்டைபோல் மாறிய சாலை

Update: 2022-08-30 16:14 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா தீத்தானிப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த அய்யங்காட்டிலிருந்து மாங்கோட்டை வரை செல்லும் இனணப்புச்சாலை பல ஆண்டுகளாக மண் சாலையாகவே உள்ளது. பராமரிப்பு இல்லாத இந்த சாலையில் ஆங்காங்கே பள்ளம், படுகுழிகள் ஏற்பட்டு உள்ளன. தற்போது தொடர் மழை பெய்து வரும் நிலையில் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி குளம் குட்டைபோல் மாறி கிடக்கிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றனர். சேறும், சகதியுமாக இருப்பதால் முதியவர்கள், மாணவர்கள், பெண்கள் நடந்து செல்லவே சிரமபடுகின்றனர். எனவே ஆபத்தான இந்த சாலை பள்ளங்களை உடனடியாக சரிசெய்யவும், இந்த சாலையை தார்சாலையாக மாற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்