கரூரில் ஆண்டாங்கோவில்-அண்ணாநகர் செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு நடந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் இந்த பள்ளத்தை சரிசெய்யும் வகையில் அதன்மீது ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. இதன் காரணமாக வாகனங்களில் செல்பவர்கள் அவதியடைந்துள்ளனர். எனவே இந்த சாலையை விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.