குண்டும், குழியுமான தார்சாலை

Update: 2022-08-30 12:23 GMT

கரூர் மாவட்டம், கவுண்டன்புதூரிலிருந்து நொய்யல்- வேலாயுதம்பாளையம் செல்லும் நெடுஞ்சாலைக்கு செல்லும் தார்சாலை போடப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதன் காரணமாக இந்த தார்சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலை வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்கள், லாரிகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் தார்சாலை குண்டும், குழியமாக உள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகனத்தை அதில்விட்டு கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே உள்ளாட்சித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த தார்சாலையை சீரமைத்து விபத்தினை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்