திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், தோளூர்பட்டி கிராமம் தெற்கு தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பெய்த மழையின் காரணமாக சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து சிதிலமடைந்து வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.