கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரெயில் பாதையில் அஞ்சுகூட்டுவிளை என்ற ஊரில் தண்டவாளத்தின் குறுக்கே ஒரு மேம்பாலம் உள்ளது. இந்த பாலம் வழியாக கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலிக்கு 4 வழிச்சாலை செல்கிறது. தற்போது பாலத்தின் மேல்பகுதியில் கான்கிரீட் சிறிது, சிறிதாக உடைந்து வருகிறது. இதனால், பாலத்தின் கம்பிகள் கொஞ்சம், கொஞ்மாக வெளியே தெரிகின்றன. கான்கிரீட் நாளுக்கு நாள் உடைந்து வருவதால் பாலம் விரைவில் சேதமடைய வாய்ப்பு உள்ளது. எனவே, இதை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சி. ராம்தாஸ், சந்தையடி.