சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டி கிராமத்தில் உள்ள சாலைகள் போடப்பட்டு சில வருடங்கள் ஆவதால் முற்றிலுமாக சேதமடைந்து பள்ளங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் சாலை முழுவதும் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைவாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.