பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் சமத்துவபுரம் தெருவில் செல்லும் சாலைகள் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுவதினால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றன. மேலும் இரவு நேரத்தில் இந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலை தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.