கரூர் மாவட்டம், புகழூர் ரெயில்வே கேட்டில் இருந்து பேச்சிப்பாறை செல்வதற்கு ரெயில்வே பாதை அருகே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மண் சாலை அமைக்கப்பட்டது. இந்த வழியாக பேச்சிப்பாரை, கவுண்டன் புதூர், செல்வநகர், சேமங்கி, முத்தனூர், நடையனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மண் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.