சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து மதுரை மேலூருக்கு புதிதாக வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலை நடப்பதை வாகனஓட்டிகளுக்கு அறிவுறுத்தும் வகையில் எந்தவித அறிவிப்பு பலகையும் இப்பகுதியில் அமைக்கப்படவில்லை. இதனால் அடிக்கடி விபத்து நடக்கும் பகுதியாக இந்த சாலை உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த சாலையில் எச்சரிக்கை பலகை அமைத்து வேலை செய்ய வேண்டும்.