புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கீழத்தானியம் பெரிய கன்மாய் வழியாக செல்லும் சாலை குண்டும், குழியுமான நிலையில் உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.