தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த அண்ணாநகருக்கு செல்ல மண் சாலை உள்ளது. அந்த சாலையும் உரிய பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் இந்த சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்பதால் இந்த பாதையை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே அண்ணா நகருக்கு தார் சாலை வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுப்ரமணி, அண்ணாநகர், கிருஷ்ணகிரி.